Tuesday, July 3, 2012

வருவாய்,வருவாய்,வருவாய் -கண்ணா-varuvai, varuvai, varuvai-kanna

கண்ணன் வரவு 



,பல்லவி
வருவாய்,வருவாய்,வருவாய் -கண்ணா 
வருவாய், வருவாய்,, வருவாய்..
சரணங்கள் 
1.உருவாய் அறிவில் ஒளிர்வாய்--கண்ணா 
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் -கண்ணா 
கருவாய் என்னுள் வளர்வாய்--கண்ணா 
கமலத் திருவோடி னைவாய்--கண்ணா (வருவாய்)

2.இணைவாய் எனதாவியிலே--கண்ணா 
இதயத்தினிலே யமர்வாய்--கண்ணா 
கணைவா யசுரர் தலைகள் -சிதறக் 
கடையூழியிலே படையோ டெழுவாய்  (வருவாய்)

3.எழுவாய் கடல்மீதினிலே -யெழுமோர் 
இரவிக் கிணையா உளமீ தினிலே 
தொழுவேன் சிவனாம் நினையே--கண்ணா
துணையே அமரர் தொழும்வா னவனே!!(வருவாய்)

No comments:

Post a Comment