Sunday, November 28, 2010

ஓடி விளையாடு பாப்பா - நீ - Odi vilayaadu paappaa




.








1.ஓடி விளையாடு பாப்பா, - நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா ,
கூடி விளையாடு பாப்பா, -ஒரு 
குழந்தையை வையாதே பாப்பா. 


2,சின்னஞ்சிறு சிருகுகுவி போலே - நீ 
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ 
மனத்தில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா 


3.கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் 
கூட்டி விளையாடு பாப்பா 
எத்தித் திருடுமந்த காக்காய் -அதற் 
கிரக்கப்படவேணும் பாப்பா.


4.பாலைப் பொழிந்துதரும் பாப்பா-அந்தப் 
பசு நல்லதடி பாப்பா 
வாலைக் குழைந்துவரும் நாய்தான்-அது 
மனிதர்க்குத்  தோழனடி பாப்பா.


5.வண்டியிழுக்கும் நல்ல குதிரை -நெல்லு 
வாழி உழுதுவரும் மாடு, 
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,-இவை 
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

6.காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு 
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு 
மாலை முழுதும் விளையாட்டு -என்று 
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா 


7.பொய் சொல்லக்கூடாது பாப்பா-என்றும் 
புறஞ் சொல்ல லாகாது பாப்பா, 
தெய்வம் நமக்குத்துணை பாப்பா-ஒரு 
தீங்கு வரமாட்டது பாப்பா.


8..பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் 
பயம்கொள்ள லாகாது பாப்பா, 
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் 
முகத்தில் உமிழிந்துவிடு பாப்பா


9.துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் 
சோர்ந்துவிடலாகாது பாப்பா,
அன்மிகுந்த் தெய்வமுண்டு-துன்பம் 
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா


10.சோம்பல் மிகக்கெடுதிபாப்பா-தாய் 
சொன்ன சொல்லைத் தட்டாதேபாப்பா 
தேம்பி யழுங் குழந்தை  நொண்டி,-நீ 
திடங்கொண்டு போராடு பாப்பா   


11.தமிழ்த்திருநாடு தன்னைப் பெற்ற-எங்கள் 
தாயென்று கும்பிடடி பாப்பா.
அமிழ்தில் இனியதடி பாப்பா,-நம் 
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா 


12.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,-அதைத் 
தொழுது படித்திடடி பாப்பா,
செல்வம்நிறைந்த ஹிந்து ஸ்தானம் -அதைத் 
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.


13.வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில் 
வாழுங் குமரி முனை பாப்பா.
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்-இதன் 
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.


14.வேத முடையதிந்த நாடு-நல்ல 
வீரர் பிறந்தநாடு.
சேதமில் லாத ஹிந்துஸ்தானம்-இதைத் 
தெய்வமென்று குமிடடி பாப்பா.


15.சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் 
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி,கல்வி-அன்பு  
நிறைய உடையோர்கள் மேலோர்.


16.உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் 
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது 
வாழும் முறைமையடி பாப்பா. 

A visitor from Madras is viewing this post frequently.Now I have posted the full text of the song and  one more video.

Friday, November 26, 2010

Bharathyi's patriotism-பாரதியின் தேசப்பற்று

பாரதியின் தேசப்பற்று
கவிஞர் ஷெல்ல யின்   இடையறாததனிமனிதத் தேடுதல். பாரதி தேசபக்தி பாடல்கள் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது. அவர் எழுதிய உணர்ச்சிமிக்க தேசபக்தி பாடல்கள் தமிழ் மக்களின் கவனத்தை இடையறாது ஈர்த்தது.அவர் எழுதிய தேசபப்க்தி பாடல்கள் "ஸ்வதேச கீதங்கள்"(1908) மற்றும் "ஜன்ம பூமி" (1909) ஆகிய இரண்டு புத்தகங்களில் காணலாம்.இந்த இரண்டு புத்தகங்களையும் சகோதரி நிவேதிதாவிற்கு அர்பணித்துள்ளார்
Patriotic Poems : 
    Bharati who loved Shelley’s tireless search for individual liberty was influenced by him while writing patriotic poetry. He caught the breathless attention of the Tamil people with his powerful lyric, the bulk of which are to be found in ‘ Swadesa Gitangal ‘ (1908) and ‘ Janma Bhumi ‘ (1909). Significantly he dedicated both the books to Sisters Nivedita.
    

Wednesday, November 24, 2010

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா-chinnanchirukilye kannamma





சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக்  கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே    
ஆடிவருந்  தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா!  
உள்ளம் குளிருதடீ; 
ஆடித்திரிதல்  கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால்  - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் 
 கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
 உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் 
 உத்திரங்  கொட்டுதடி; 
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர்  நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!

Sinnanchirukiliye kannamma
Selvakkalanjiyame (chinnanchiru)
Ennai kali theerka ulagil etram puriya vanthaai (chinnanchiru)
Pillai kaniyamuthe kannamma pesum porchithirame 
Alli anaithidave enmel aadi varum thene (chinnamchiru)
Odi varukaiyile kannamma ullam kuliruthadi 
Aadi thirthal kandaal unnaippoi aavi tazhuthadi 
Uchithanai mukarnthal karuvam ongi valarithadi 
Mechi unnai urar pugazhnthaal meni silirkuthadi
Kannathil muthamittal ullamthaan kalveri kolluthadi
Unnai thazhividilo kannammaa unmathamaguthadi
Un kannil neer vazhindaal en nenjil uthiram kottuthadi 
En kannil paavayanro kannammaa

En uyir ninnathanro!  en uyir ninnathanro! en uyir ninnathanro!

Wednesday, November 10, 2010

Arivum nee-அறிவும் நீ, தருமம் நீ,உள்ளம் நீ,






அறிவும் நீ,
தருமம் நீ,
உள்ளம் நீ,
அதனிடை மருமம் நீ,
உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ,
தோளிடை வன்புநீ,
நெஞ்சகத்து அன்புநீ,
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெல்லாம், தேவி , இங்குனதே!  


Arivum nee,  
tharumam nee,
ullam nee,
athanidai marumam nee, 
udarkan vazhnthidum uyir நீ,
Tholidai vanbunee,
nenjakathu anbunee

Alayanthorum anipera vilankum
deivachilaiyellam, devi, ingunathe!

Friday, November 5, 2010

Ninnaiye rathienru ninaikkirenadi kannamma-நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா












பல்லவி  


நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரண மெய்தினேன்
(
நின்னையே)

சரணங்கள் 

1.பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயற்
பின்னையே-நித்ய-
கன்னியே, 
கண்ணம்மா( நின்னையே)

2.மாரனம் புகலென் மீது வாரி வாரி வீசநீ (2)
கண் பாராயோ-வந்து சேராயோ,

கண்ணம்மா ( நின்னையே)

  3. யாவுமே சுகமுனிக்கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மே வுமேஇங்கு யாவுமே,கண்ணம்மா

(
நின்னையே)

Saturday, October 30, 2010

payumoli nee enakku - வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நீ எனக்கு;
      தோயுமது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு;
 வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
      தூயசுடர் வானொலியே! சூறையமுதே! கண்ணம்மா!(
வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
      பூணும் வட நீயெனக்கு, புது வயிர நானுனக்கு;
காணுமிடந  தோறு நின்றன் கணணி னொளி வீசுதடி:
      மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!


வானமழை நீயெனக்கு,வண்ணமயில் நானுனக்கு;
      பானமடி நீயெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
      ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு;
      பண்ணுசுதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணி யெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை!
                                                                                     நின் சுவைக்கே
     கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு;
     வேதமடி நீயெனக்கு விந்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந்  தீஞ்சுவையே!
     நாதவடி வானவனே! நல்லயுயிரே! கண்ணம்மா!  


Note: there are three more saranams, but not included in the song.





          You can enjoyed the beutiful music by S.P.Balasubramaniam    and the apt video

Friday, October 29, 2010

சாகா வரம் அருள்வாய்-ராமா saaga varam arulvai rama


Nithyashree Mahadevan

O.S.Arun
  சாகா வரம் அருள்வாய், ராமா
    சதுர்மறை நாதா - சரோஜா பாதா
ஆகாசந தீகால் நீர்மண்
    அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்
ஏகா மிர்த மாகிய நின்தாள் 
    இணைசர னென்றல் இது முடி யாதா  ? (சாகா)  
வாகார்தோள்  வீரா, தீரா

வாகார்தோள்  வீரா, தீரா மன்மத ருபா வானவர் பூபா
பாகார் மொழிஸீ தையின் மென்றோள்
    பழகிய மார்பா!பதமலர் சார்பா! (சாகா)

நித்யா, நிர்மலா . ராமா
   நிஷ்க லங்கா  சர்வா தாரா
சத்யா. சனாதனா ராமா,
   சரணம், சரணம், சரணுமுதாரா!  (சாகா)
lyrics in english:
Saagaa varam arulvai -Rama
   sathurmarai natha - saroja pathaa
Agasanth theekal neerman
   athanai bhoothamum othu nirainthai
ekamirthamakia ninthal
   inaisaran enral ithu mudiyatha (saaga)

Vagarthol veera, theera,
   manmatha roopa,vanavar bhoopa
paagar mozhisee thayin menrol
   pazhagia marba!pathamar sarba!(saaga)

nithya, nirmala, rama
   nishkalanga,sarva, thara,
sathya, sanathana, rama,
Saranam, saranam, saranamuthara (saaga)



Thursday, October 28, 2010

Nirpathuve Nadappathuve -நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பனவே


௧. நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பனவே நீங்களெல்லாம் 
சொப்பனந்தானோ  - பல தோற்ற மயக்கங்களோ 
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 


௨.வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானல் னீரோ -வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் 
நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? 


௩.காலமென்றே யொருநினைவுங்  காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யோ? - இதை சொல்லோடு சேர்ப்பாரோ?


௪.காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு  பொய்யிலே நித்தம் - விதிதொடர்ந்திடுமோ/
காண்பதுவே யுறுதிகண்டோம் காண்பதல்லா லுறிதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி   நித்தியமாம்



குறிப்பு: 'நிற்பது' நடப்பது' முதலியன உலகத்தில் தோன்றும் வடிவங்கள்; 'கற்பது' கேட்பது" முதலியன செய்கைகள்
"கோலமும் பொய்களோ' 'அங்கு குணங்களும் பொய்களோ" என்பது தெளிவாகச் சொன்னால் , 'தேளின் உருவம் மாத்திரம் பொய்யோ? அது கொட்டுவதும் பொய்தானோ' என்ற கேள்வி.
குறிப்பு: கடைசி பாராவில் உள்ள வரிகள் மாற்றி பாடப்படுகிறது.  

Wednesday, October 27, 2010

mohathai konruvidu-மோகத்தை கொன்றுவிடு - அல்லாலென்றன்




1.மோகத்தைக்  கொன்றுவிடு - அல்லாலென்றன்
     மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச்  சாய்த்துவிடு - அல்லாலதில்
     சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
     ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
     யாவையும் செய்பவளே!

2.பந்தத்தை நீக்கிவிடு -அல்லாலுயிர்ப்ப
     பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -அல்லாலிதைச் 
     செத்த வுடலாக்கு   
இந்த பதர்களையே - நெல்லாமென் 
    எண்ணி இருப்பேனோ 
எந்த பொருளிலுமே - உள்ளேநின்
    றியங்கி இருப்பவளே.
 
3.உள்ளம் குளிராதோ பொய்யாணவ
    ஊன மொழியாதோ?
கள்ள  முருகாதோ -அம்மா பக்திக் 
    கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே -இந்நாய் சிறு 
    வேட்கை தவிராதோ? 
விள்ளற் கரியவளே - அனைத்திலு 
 மேவி இருப்பவளே!

Vellaithamarai Pooviliruppal-வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்




பல்லவி
1 .வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
     வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
     கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
அனுபல்லவி
1..உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
     ஓதும் வேதத்தி னுண்ணின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
     கருணை வாசகத்  துட்பொரு ளாவாள்  (வெள்ளைத்)
சரணம் 1
மாதர் தீங்குரற்  பாட்டி லிருப்பாள்
     மக்கள் பேசும் மழலையி லுல்லாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
     கிளியி னாவை இருப்பிடங் கொண்டாள்
சரணம் 2
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
     குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈத னைத்தின் எழிலிடை யுற்றாள்
     இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்  (வெள்ளைத்)

குறிப்பு: இன்னும் ஏழு சரணங்கள் உள்ளது. அவைப் பாட்டில் இடம் பெறவில்லை

Subramani Bharathi composition Praise of Goddess Saraswathi 
Lyrics: Pallavi
Vellai tamarai puvil iruppal
vinai seiyum oliyil iruppal
kollai inbam kulavu kavidai
koorum pavalar ullathilruppal  
Anupallavi
ulladam porul thediyunarnde
odhum vedathin ulnintrin lolirval
kallamatra munivargal koorum
karunai vasagath thutporu laval (vellaith)
Charanam 1
madar teengurarar paatil iruppal
makkal pesum mazhalaiyil ullal
geedham padum kuyilin kuralaik
kiliyin navai iruppidum kondal

2. kodha ganra tozhiludaitagik
kulavu chittiram gopuram koyil
ida naittin ezhilidai yutral
inba mevadi vagidap petral

Tuesday, October 26, 2010

காணி நிலம் வேண்டும் – kani nilam vendum





Presented by S.Prabakar

1.காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்அங்கு 

தூணி லழகியதாய் - நன்மாடங்கள் 

துய்ய நிறத்தினதாய் - அங்கு 
தூணி லழகியதாய் - நன்மாடங்கள் 
துய்ய நிறத்தினதாய் - அந்தக் 

காணி நிலத்தினிடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அந்தக் 
காணி நிலத்தினிடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்கு

கேணி யருகினிலே - தென்னைமரம்k கீற்று மிளநீரும் – அங்கு
கேணி யருகினிலே - தென்னைமரக  கீற்று மிளநீரும
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்2.பத்துப் பன்னிரண்டுபத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்-அதன்  

பக்கத்திலே வேணும்
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்-அதன்  
பக்கத்திலே வேணும் - நல்ல 

முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு 

கத்துங் குயிலோசை, கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்,
கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும், - என்றன் 

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்- என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;
3.பாட்டுக் கலந்திடவே, பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள் 

கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - அந்தக் 

காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன் காவ லுறவேணும்- அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன் காவ லுறவேணும்- என்றன் 

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்- என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும  
Meaning:
a piece of land I want, parasakthi
     a piece of land I want
there with carved pillars-balconies
     painted in pristine white-in
that acre of land such a house
     do I need to be built –with
coconut leaves hugging the well with
     tender coconuts
ten or twelve - coconut trees
     do I want nearby – like
shine of flawless pearl –moonlight
     do I want to be with me,
 the cooing of cuckoo-do i want to-
     grace my ears –to make my soul happy-
soft, gentle breeze should be there too.
     to sing the songs of pleasure- there
I want a chaste damsel with me –in
     our joyous union-verses should flow freely-in
In that sylvan locale – Parasakthi! Your
     benign presence I need – with my
poetic abilities-should this world be graced.

Monday, October 25, 2010

Muruga, Muruga, Muruga -முருகா, முருகா, முருகா



பல்லவி
முருகா, முருகா, முருகா
சரணங்கள்
1 .வருவாய் மயில்மி தினிலே
   வடிவேலு டனே வருவாய்
    தருவாய் நலமுந தகவும் புகழுந
    தவமுந  திறமுந தனமுங் கனமே (முருகா)
 2 .அடியார் பலரிங் குளரே
    அவரை விடுவித்  தருள்வாய்
    முடிய மறையின் முடிவே  அசுரர் 
     முடிவே கருதும் வடிவேலவனே  (முருகா)
3 .சுருதிப் பொருளே வருக,
    துணிவே, கனலே, வருக 
    கருதிக் கருதிக் கவலைப்படுவார் 
     கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
4 . அமரா  வதிவாழ் வுறவே 
     அருள்வாய்! சரணம்!  சரணம்!
      குமரா பிணியா வையுமே சிதறக்
      குமுறும் சுடர்வடி வேலவனே, சரணம்  (முருகா)
5 . அறியர் கியகோ யிலிலே
      அருளா கியதாய் மடிமேல்
      பொறிவே லுடனே வளர்வாய்,அடியார்
     புதுவாழ்  வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
6 . குருவே, பரமன்,மகனே
     குகையில் வளரும் கனலே  
      தருவாள் தொழிலும் பயனும், அமரர்
      சமரர் திபனே, சரணம், சரணம் (முருகா)

Saturday, October 23, 2010

Katruveliyidai kannamma -Ninran-காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்

காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப் பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)
நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

meaning:

     In this breezy expanse Kannamma - I
feel blissful thinking of your love- Luscious
lips like a fount of honey -Moon
like eyes with serenity - Gold
like skin shining with brilliance - in this
world till I live - these will absorb
me, thinking of nothing else - make me
feel like a celestial being.
     You are my life Kannamma - I will
sing thy praise every moment
All my sadness, my sorrows vanish - When
I see the lustre of your presence
I feel the nectar of love in my lips - when
I whisper thy name Kannamma
You're the light lit by the fire of my soul
You're my thought, my purpose in life.