Wednesday, June 20, 2012

கந்தசஷ்டி கவசம்-Kanda sasti kavasam with Tamil Lyrics - Sulamangalam sisters





கந்தசஷ்டி கவசம் 

குறள் வெண்பா 
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம்  பலித்துக்  கதித்து ஓங்கும் 
நிஷ்டையும் கைகூடும்.
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த 
குமரன் அடி நெஞ்சே குறி.

                  நூல் 
சஷ்டியை நோக்க சரவணா பவனார் 
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன் 
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை 
கீதம் பாட கிண்கிணி ஆட 
மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்.............5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து 
வர வர வேலாயுதனார் வருக 
வருக வருக மயிலோன் வருக 
இந்திர முதலா எண்திசை போற்ற 
மந்திர வடிவேல் வருக வருக............10

வாசவன் மருகா வருக வருக 
நேசக் குறமகள் நினைவோன் வருக 
ஆறுமுகம் படைத்த ஐயா வருக 
நீறிடும் வேலவன் நித்தம் வருக 
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக.........15

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண  பவச ரரரர ரரர 
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி 
விணபவ சரஹண வீரா நமோ நம 
நிபவ சரஹண நிறநிற நிறன.........20  

 வசர ஹணப வருக வருக 
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளுக இளையோன் வருக 
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் 
பரந்த விழிகள் பன்னிரன்டலங்க........25

விரைந்தனைக் காக்க வேலோன்வருக 
ஐயும் கிலியும் அடைவு டன்சௌவும் 
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்  
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும் ....30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்   
குண்டலியாம் சிவ குகன்தினம் வருக   
ஆறுமுகமும் அணிமுடி ஆறும் 
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் 
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்........35

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் 
ஈராறு செவியில் இலகு குண்டலமும் 
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் 
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து 
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்......40

முப்புரி நூலும் முத்தணி மார்பும் 
செப்பழகுடைய திருவயிறு உந்தியும் 
துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும் 
நவரத்தினம் பதித்த நற்சீராவும் 
இருதொடை அழகும் இணை முழந்தாளும்.....45

திருவடி யதனில்  சிலம்பொலி முழங்க 
செககண செககண செகக செககண 
மொகமொக மொகமொக மொகமொக மொகென   
நகநக நகநக நகநக நகென 
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுகண.....50

ரரரர ரரரர ரரரர ரரர 
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி 
டுடுடுடு  டுடுடுடு  டுடுடுடு  டுடுடு       
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு 
விந்து வித்து மயிலோன் விந்து.......55

முந்து முந்து முருகவேள் முந்து   
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் 
லாலா லாலா லாலா வேசமும் 
லீலா லீலா லீலா வினோதனென்று .....60

உன்திரு வடியை உருதி என்றெண்ணும் 
என்தலை வைத்துன் இணையடி காக்க 
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க 
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க....65

பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க 
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க 
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க 
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க 
பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க.....70

முப்பத திருப்பல் முனைவேல் காக்க 
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க 
கன்னமிரண்டும்  கதிர்வேல் காக்க 
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க 
மார்பை இரத்தின வடிவேல் காக்க.....75

சேரிள முலைமார் திருவேல் காக்க 
வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க 
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க 
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க 
பழுபதினாறும் பருவேல் காக்க.....80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க 
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க 
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க 
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க 
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.....85

வட்ட குதத்தை வல்வேல் காக்க 
பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க 
ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க 
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க....90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க 
பின்கையிரண்டும் பின்னவள் காக்க 
நாவில்  ஸரஸ்வதி நற்றுணை ஆக  
நாபிக் கமலம் நல்வேல் காக்க 
முப்பால் நாடியை முனை வேல் காக்க....95

எப்பொழுதும்  எனை எதில்வேல் காக்க 
அடியேன் வசனம் அசைவுள நேரம் 
கடுகவே வந்து கனக வேல் காக்க  
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க 
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க...100

ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க 
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க 
காக்க காக்க கனகவேல் காக்க 
நோக்க நோக்க நொடியில் நோக்க 
தக்கத் தக்கத் தடையறத் தாக்க....105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட 
பில்லி சூனியம் பெரும்பகை அகல 
வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும் 
அல்லற் படுத்தும் அடங்கா முனியும் 
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்...110

கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும் 
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்  
அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட  
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் 
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்...115

கன புசைகொள்ளும் காளியோடனே வரும் 
விட்டங் காரரும் மிகுபல பேய்களும் 
தண்டியக்காரரும் சண்டாளர்களும் 
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட 
ஆனை அடியினில் அரும்பாவைகளும்...120

பு னை மயிரும் பிள்ளைகள் என்பும் 
நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும் 
பாவைகளுடனும் பலகலசத்துடன் 
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் 
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்....125

காசும் பணமும் காவுடன் சோறும் 
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் 
அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட 
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட 
கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட....130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட 
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக் கையிற்றால் 
கட்டுடன் அங்கம் கதறிட க்கட்டு  
கட்டி உருட்டு கால்கை முறிய...135

கட்டு கட்டு கதறிடக் கட்டு 
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட 
செக்கு செக்கு செதில் செதிலாக 
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு 
குத்து குத்து கூர்வடிவேலால்....140

பற்று பற்று பகலவன் தணலெரி 
தணலெரி தணலெரி தணலது  வாக 
விடு விடு வேலை வெருண்டது வோட 
புலியும் நரியும் புன்னரி நாயும் 
எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட....145

தேளும் பாம்பும்  செய்யான் புரான்  
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் 
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க 
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் 
வாதம் சயித்தியம் வலிப்புப  பித்தம்...150

சூலைசயங்  குன்மம் சொக்குச்சிரங்கு 
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி 
பக்கப்  பிளவை படர் தொடை வாழை 
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி 
பற்குத்து அரணை பருஅ ரை யாப்பும்....155 

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் 
நில்லாதோட நீ எனக் கருள்வாய் 
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக 
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா 
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்...160 

உன்னைத் துதிக்க உன் திருநாமம் 
சரஹண பவணே சையொளி பவனெ
திரிபுர பவனெ திகழொளி பவனெ  
பரிபுர பவனெ  பவம் ஒளி பவனெ
அரிதிரு மருகா அமரா பதியைக் ...165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விதித்தாய் 
கந்தா குகனே கதிர்வேலவனே 
கார்த்திகை மைந்தா  கடம்பா கடம்பனே 
இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா 
தணிகா சலனே சங்கரன் புதல்வா....170

கதிகா மத்துறை கதிர்வேல் முருகா 
பழனிப் பதிவாழ் பாலகுமாரா 
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா 
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா 
சமரா புரிவாழ் சண்முகத் தரசே...175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய் 
என்நா இருக்க யான் உனைப் பாட 
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை 
பாடினே ஆடினேன் பரவசமாக 
ஆடினேன் நாடனேன் ஆவினன் பூதியை....180

நேச முடன்யான் நெற்றியில் அணியப் 
பாச வினைகள் பற்றது நீங்கி 
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புட ன் இரஷி அன்னமுஞ் சொன்னமும் 
மெத்த மெத்த தாக வேலா யுதனார்...185

சித்திப்பெற் றடியேன் சிறப்புடன் வாழ்க 
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க 
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க 
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க 
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்...190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்  
வாழ்க வாழ்க வறுமைகள் நீங்க 
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் 
எத்தனை யடியேன் எத்தனை செய்தால் 
பெற்றவன் நீ குறு பொறுப்பது உன் கடன் ...195

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே 
பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து
 மைந்தனென் மீது மனமகிழ்ந்தளிலித் 
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் 
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய....200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் 
காலையில் மாலையில் கருத்துடன் நாளும் 
ஆசாரத்துடன் அங்கந் துலக்கி 
நேச முடன் ஓருநினைவது வாகி 
கந்தர் சஷ்டக்  கவசம் இதனைச்....205

சிந்தை கலங்காது தியானிப்பவவர்கள் 
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு 
ஓதியே செபித்து உகந்து நீறணிய 
அஷ்டதி க்குள்ளோர் அடங்கலும் வசமாய்த் 
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்...210

மாற்றல ரெல்லாம்  வந்து வணங்குவர் 
நவகோள்  மகிழ்ந்து நன்மை யளித்திடும் 
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் 
எந்தநாளுமீ  ரெட்டா வாழ்வார் 
கந்தர்கை வேலாம் கவசத்தடியை...215

வழியாற் கான மெய்யாம் விளங்கும் 
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் 
பொல்லாதவரை பொடிபொடி யாக்கும்  
நல்லோர் நினைவில் நடனம் புரியும் 
சர்வ சத்துரு சங்கா ரத்தடி...220

அறிந்தென் துள்ளம் அஷ்டலட் சிமிகளில் 
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் 
சூரபத்மாவைத் துணித்தகை யதனால் .
இருபபத் தேர்வர்க்கு உவந்தமு தளித்த 
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்...225

சின்னக் குழந்தை சேவடி போற்றும் 
என்னை தடுத தாட்க்கொள்ள என்றன துள்ளம் 
மேவிய வடிவுறும் வேலவ போற்றி 
தேவர்கள் சேனாபதியே போற்றி 
குறமகள் மனமகிழ் கோவே போற்றி....230

திறமிகு திவ்விய தேகா போற்றி 
இடும்பா யுதனே இடும்பா போற்றி 
கடம்பா போற்றி கந்தா போற்றி 
வெட்சி புனையும் வேளே போற்றி 
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே....235

மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம் 
சரணம் சரணம் சரஹண பவ ஓம் 
சரணம் சரணம் சண்முகா சரணம்...238

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று. 
Note;The tamil lyrics was personallly typed by me

147 comments:

  1. Very very thank you.very use ful.OM MURUGA

    ReplyDelete
  2. மிக்க நன்றி

    ReplyDelete
  3. Thank you ���� sir..great work

    ReplyDelete
  4. Thank for your selfless effort to help others to learn the Kavasam

    ReplyDelete
  5. Lyrics la error iruku maadhiri theridhu konjsm verify paninga na nalla irukum. Vaazhga valamudan

    ReplyDelete
  6. முருகனுக்கு அரோகரா.... ��

    ReplyDelete
  7. Really great work, my humble request is that while uploading the sloka in the blog please proof read several times to avoid the flaws.

    ReplyDelete
    Replies
    1. Could you let us know if the sloka has been corrected or what are the errors/typo you found in the lyrics. This will help all of us.

      Delete
    2. Agree. Spelling errors need to be corrected

      Delete
  8. Om Saravanan om muruga om senthilnatha om karthigeya om malaiguru om kantha
    Kadamba kathirvela aru padeyappane
    Om Saravanan bhavva

    ReplyDelete
  9. Thanq soooooo much vetri vell muruganuku arogara

    ReplyDelete
  10. Thanq soooooo much vetri vell muruganuku arogara

    ReplyDelete
  11. செந்தூர் ஆண்டவனுக்கு அரோகார!

    ReplyDelete
  12. Lyrics konjam error iruka maari teriyudhu

    ReplyDelete
  13. Tq so much sir🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    ReplyDelete
  14. Mikka nandri aiyyah. Migavum payanulla bakti kavasa padalvarigal. 👍🙏💐

    ReplyDelete
  15. Thank you so much helped in right time of my life

    ReplyDelete
  16. அன்புடன் இரஷி என்பது அன்புடன் இரக்ஷி என திருத்தப்படவேண்டும் இம்மாதிரி சில சொற்கள் உள்ளன. அவையும் திருத்தம் செய்க.

    ReplyDelete
    Replies
    1. "Kaathu Devarkal kadum sirai viduthai" (endru varavendum)kadum sirai vithithai nu iruku

      Delete
  17. Muruga saranam
    In lyrics thaka thaka thadayara thaka
    Correct word is thaaka ... Not thaka

    ReplyDelete
  18. Thanks a lot. Makkal thondu magesan thondu

    ReplyDelete
  19. Bala dhandaudha baaniku aragora

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Thank u soo much. om muruga pottri 🙏

    ReplyDelete
  22. Its very useful .thank u so much sir..

    ReplyDelete
  23. Om muruga it is good and helpful

    ReplyDelete
  24. Nice usefully very nice thanks

    ReplyDelete
  25. There are errors still in the spoke pls correct

    ReplyDelete
  26. சொல்லச் சொல்ல இனிக்குதடா, முருகா உன் பெயரை, இது கந்தன் அறுமிக் காப்பு என்னும் பெயரில் தூய தெய்வத் தமிழில் செத்த மொழியாம் சமற்கிருதக் கலப்பின்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் வாழ்க தமிழ்... வளர்க சிவனிய மாலியத் தமிழ் நெறி

    ReplyDelete
  27. Super but slight mistake in spelling

    ReplyDelete
  28. Kodi punniyam ungalukku. Today I am able to chant 3 times in Sikkal Singaravelavar koil by looking into your typed Kavacham

    ReplyDelete
  29. இன்று ஶ்ரீமகாகந்தசஷ்டி சூரசம்ஹாரம் அடியேன் குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியர் திருக்கோயிலில் கவசம்தனை பாடி மகிழ்ந்தேன்

    ReplyDelete
  30. Om muruganuku arokara
    Kaindhanuku arokara
    Vel vel
    Vetrivel
    Muruganuku
    Arokarannnnneeeee

    ReplyDelete
  31. Thanks a lot. But its having lot of spelling mistakes.

    ReplyDelete
  32. Thanks a lot. But its having lot of spelling mistakes.

    ReplyDelete
  33. Thanks a lot. But its having lot of spelling mistakes.

    ReplyDelete
  34. Wonderful. Very useful as I read it daily and can hear also when required. Thank u sir for the work. Ramanathan, Coimbatore

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. Thank u so much sir....but lot of spelling mistakes is there...so pls check it out..Thank u once again

    ReplyDelete
  37. If you don't know to write in Tamil please don't post. Kandha sashti kavasam you posted is full of mistakes. For you get popular don't insult God.

    ReplyDelete
  38. Too good a work.I had complimented the work earlier also and repeat this is too useful nd divine. Thank you
    .

    ReplyDelete
  39. Thanks you. I read it along with vasanth tv 6pm everyday..

    ReplyDelete
  40. Sir, pl delete first two comments on sept 7th 2019.thnk u

    ReplyDelete
  41. Sir, pl delete first two comments on sep 7th 2019.thank u sir

    ReplyDelete
  42. ஓம் முருகா போற்றீ

    ReplyDelete
  43. ஓம் முருகா போற்றீ

    ReplyDelete
  44. Super🎈 Happy Birthday!
         🔥      🔥      🔥
         📍      📍      📍
         📍      📍      📍
    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
    🎂🍓🎂🍓🎂🍓🎂🍓
    🍓🎂🍓🎂🍓🎂🍓🎂
    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
  45. There is so much error In lyrics....

    ReplyDelete
  46. Sir, pl delete first two comments on Sep 7th September 2019.pl sir. Thank you

    ReplyDelete
  47. Plenty of spelling mistakes. Check before publishing

    ReplyDelete
  48. Plenty of spelling mistakes! Work not checked before publishing

    ReplyDelete
  49. Impressive post, I love the way Article is written. Appreciating your hard work! Please check out my website Women In Saree!, Thank You:)

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. Certain corrections have to be carried out in the lyrics. Your effort is very well appreciated.

    ReplyDelete
  53. THANK YOU SO MUCH FOR THE LYRICS!

    ReplyDelete
  54. Could you please correct if any mistakes available.

    Thanks

    ReplyDelete
  55. Very good work... so useful to bhaktas

    ReplyDelete
  56. Good. but there are lot of mistakes. Correct line as follows:
    line 23 :என்னை ஆளும் இளையோன் வருக
    line 86 :வட்ட குதத்தை வடிவேல் காக்க
    line 92 :பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
    line 135:கட்டி உருட்டு கைகால் முறிய
    line 148:ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
    line 162:சரஹண பவணே சைலொளி பவனெ
    line 166:காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
    line 169:இடும்பனை யழித்த இனியவேல் முருகா
    line 192:வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
    line 198:மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    line 236:மயில்நட மிடுவோய் மலரடி சரணம்

    ReplyDelete
  57. thank you sir !! 여성고소득알바 for sharing your good information!!

    ReplyDelete
  58. What could be the tree meaning of these?couldn't be 36 times a day..36 moola mantras?any enlightenment s....
    ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
    ஓதியே செபித்து உகந்து

    ReplyDelete