Sunday, June 10, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த -nenu porukkuthillaye-intha

1.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

அஞ்சி யஞ்சி சாவார்-இவர் 
அஞ்சாத பொருளில்லை அவனியிலே 
வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த 
மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக 
துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)


2.மந்திர வாதி யென்பார்-சொல்ல 
மாத்திரத்தி லே மனக் கிலிபிடிப்பார் 
யந்திர சூனியங்கள் -இன்னும் 
எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டோ- ஜனம் 
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம் 
அந்த அரசியலை -இவர் 
அஞ்சுதரு பேயென்றேண்ணி நெஞ்சமயர்வார்(நெஞ்சு)
  
3.சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் 
துப்பாக்கி கொண்டோருவன் -வெகு 
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் 
அப்பாலெ வனோசெல்வான்-அவன் 
ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிர்பபார் 
எப்போதும் கைத்தட்டுவார்-இவர் 
யாறிடத்தும் பூனைகள்போலேங்கிநடப்பார் (நெஞ்சு)
  
4.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 
கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு 
கோடியென் றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன் 
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால் 
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு 
நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)


5.சாத்திரங்க  லொன்றுங்  காணார் -பொயச் 
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே 
கோத்திரம் ஒன் றாயிருந்தாலும் -ஒரு 
கொள்கையிற் பிரிந்தவனைக் குழைத்திகழ்வார் 
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் -தமைச் 
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் 
ஆத்திரங்க்கொன் டேயிவன் சைவன் -இவன் 
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)


6. நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன் 
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்   
பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம் 
பரிதவித் தே உயிர் துடிதுடித்து 
துஞ்சி மடிகின்றாரே -இவர் 
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)


7.எண்ணிலா நோயுடையார்-இவர் 
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் 
கண்ணிலாக் குழ்ந்தைகள்போல்-பிறர் 
காட்டிய வழியிற்சென்று மாட்டிகொள்வார்
நண்ணிய பெருங்கலை கள் - பத்து 
நாலா யிரங் கோடி நயந்துநின்ற 
புண்ணிய நாட்டினிலே -இவர் 
பொறியற்ற விலங்குகள் போலவாழ்வார் (நெஞ்சு)
  


     

13 comments:

  1. A visitor from Melbourne,Victoria, Australia viewed this post today

    ReplyDelete
  2. A vistor from Toronto,Ontario viewed this post today

    ReplyDelete
  3. The visitor from New Delhi viewe this post day.Why dont you follow me.Click join this site.That is all.+

    ReplyDelete
  4. ennaku piditha kavithay , thairiyamum thannambikaiyum ootum kavithay nanum enathu daddyum bharathiyin rasikai.... pengal singa pennay singa pennay thalai nimira oru motivation intha kavithay

    ReplyDelete
  5. 6th para thappu ... nenju porukkudhillaiye idhai ninainchu ninaindhidinum verukkudhillaiye nu varum

    sir pathavadhu type panunga niraiya mistake

    ReplyDelete
  6. Will I get the explanation of the above mentioned lines in tamil

    ReplyDelete
    Replies
    1. Ya definitely.. Search again meaning this song

      Delete
    2. i need he explanation for the first one to can i also have it thanks

      Delete
  7. https://web.facebook.com/maatamilpotri/posts/3082270638653153

    ReplyDelete
  8. தமிழின் தலைமகன், நின் புகழ் வாழ்க வாழ்க

    ReplyDelete
  9. Varumayin niram sivappu movie sent me here.

    ReplyDelete