Wednesday, June 20, 2012

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பனவே நீங்களெல்லாம்-Nirpathuve, nadappathuve, parappanave, neengalellam

பொய்யோ?மெய்யோ?
(எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மையதான். ஆனால் எல்லோருக்கும், எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.சின்ன த்ரிச்டாந்திரம் சொல்லுகிறேன்.)
     ஒரு செல்வர், ஒரு கிழவனார்: ஒரு வேளை ஆகாரம் செய்துகொண்டு,லௌகிக விஷயங்களைத் தான் கவனியாமல் பிள்ளைகள் கையிலே கொடுத்துவிட்டு, நியம நிஷ்டைகள் ஜப தபங்களுடன் சுந்தர காண்டத்தையும் கடோபநிஷத்தையும்  செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேமலிருப்பதே மேலான வழி என்ற கொள்கை இந்தக் கிழவனாருக்குச் சரிப்பட்டுவிடும்.
     ஒரு 16 வயது ஏழைப்பிள்ளை :தகப்பனில்லை.வீட்டிலே தாயாருக்கு, தங்கைக்கும் தனக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டுவந்தால்தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம்.இவன் மேற்படி சுந்தரகாண்டவழியைப் பொய் பிடித்தால் நியாயமாகுமா? 
      இந்த உலகமே பொய் என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது.ஸந்யாசிகள் இதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும்.

அதைப் பற்றி எனக்கு இந்த நிமிஷம் வருத்தமில்லை.குடும்பத் திலிரு ப்போர்க்கு  அந்த வார்த்தை பொருந்துமா?நடு வீட்டில் உச்சரிக்கலாமா?

அவச்சொல்லன்றோ? நமக்கு தந்தை வைத்து விட்டுப் போன வீடும், வயலும் பொய்யா?தங்கச் சிலை போல நிற்கிறாள் மனைவி னது துயர த்துக்கெல்லாம்  கண்ணீர் விட்டுகரைந்தாள்;நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்;நமது குழந்தைகளை  வளர்த்தல்; அவள் பொய்யா?குழந்தகளும் பொய்தானா?பெற்றவரிடம் கேட்கிறேன்.குழந்தைகள் பொய்யா?நமது வீட்டில் வைத்து கும்பிடும் குலதெய்வம் பொய்யா?
     வீடு கட்டி குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்ப்படி சாஸ்திரம் பயன் படாது.நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது,நோயில்லமை,அறிவு, செல்வம் என்ற நான்கும்.இவற்றை தரும்படி தத்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லா தெய்வங்களும் ஒன்று.ஆறாம், பொருள், இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காணவேண்டும். தெய்வத்தின் ஒளி  கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும்.




1.நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பனவே நீங்களெல்லாம் 
சொப்பனந்தானோ  - பல தோற்ற மயக்கங்களோ 
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 

2..வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் 
கானல் னீரோ -வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் 
நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? 

3..காலமென்றே யொருநினைவுங்  காட்சியென்றே பலநினைவும் 
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ? 
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யோ? - இதை சொல்லோடு சேர்ப்பாரோ?

4..காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு  பொய்யிலே நித்தம் - விதிதொடர்ந்திடுமோ/
காண்பதுவே யுறுதிகண்டோம் காண்பதல்லா லுறிதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி   நித்தியமாம்


பின்னுரை:முதற் பாட்டிலே "நிற்பது"நடப்பது" முதலியன உலகத்தில் தோன்றும் வடிவங்கள்;"கற்பது"கேட்பது"முதலியன செய்கைகள்.மூன்றாம் பாட்டிலே "கோலமும்  பொய்களோ,அங்குக் குண ங்களும் பொய்களோ"பொய்களோ என்பது,தெளிவாகச்சொன்னால்."தேளின் உருவம் மாத்திரம்  
பொய்யோ?அது கொட்டுவதும் பொய்தானோ? என்ற கேள்வி.

No comments:

Post a Comment