Tuesday, June 12, 2012

கனிகள் கொண்டுதரும் கண்ணன் -kanikal kondutharu kannan

1.கனிகள் கொண்டுதரும் கண்ணன் 
கற்கண்டு போலினிதாய் 
பனிசெய் சந்தனமும் -பின்னும் 
பல்வகை யக்தர்களும் 
குனியும் வான்முககத்தான்-கண்ணன் 
குலவி நெற்றியிலே 
இனிய பொட்டிடவே-வண்ண 
மியன்ற சவ்வாதும் 


2.கொண்டை முடிப்பதற்கே-மனங் 
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே-கண்ணன் 
மையுங்   கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே -செம்மை 
சார்த்துசெம் பஞ்சுதரும்; 
பெண்டிர் தமக்கெல்லாம் -கண்ணன் 
பேசருந் தெய்வமடீ  


3.குங்குமம் கொண்டுவரும் -கண்ணன் 
குழைத்து மார்பெழுத;
சந்கையி லாதபணம்-தந்தே 
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல்-முகம் 
பார்திருந் தாற்போதும்;
மங்களமாகுமடீ-பின்னோர் 
வருத்தமில்லையடீ.  

No comments:

Post a Comment