Tuesday, June 26, 2012

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -பராசக்தி - Omsakthi omsakthi om-Parasakthi







ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -பராசக்தி 
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் 
ஓம்சக்தி ஓம்சக்தி- ஓம்சக்தி ஓம்சக்தி 
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம 

1.கணபதிராயன் -அவனிரு 
காலைப்  பிடித்திடுவோம் 
குணமு யர்ந்திடவே-விடுதலை 
கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

2.சொல்லுக் கடங்காவே-பராசக்தி 
சூரத் தனங்கலெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பராசக்தி 
வாழியென் றேதுதிப்போம் (ஓம்சக்தி ஓம்சக்தி ஓ)ம்  

3.வெற்றிவடிவேலன் -அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்;
சுற்றிநில்லாதேபோ!-பகையே!
துள்ளிவருகுதுவேல்(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

4.தாமரைப்பூவினிலே -சுருதியைத் 
தனியிருந்துரைப்பாள்     
பூமணித் தாளினையே-கண்ணிலொற்றிப்  
புண்ணிய மெய்துடுவோம்(  ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 

5.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும்  
பாதத்தினைப் புகழ்வோம் 
மாம்பழ வாயினிலே -குழலிசை 
வண்ணம் புகழ்ந்திடுவோம்(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

6.செல்வத் திருமகளை-திடங்கொண்டு 
சிந்தை செய்திடுவோம் 
செல்வமெல்லாந்தருவாள்-நமதொளி   
திக்கனைத் தும்பரவும் 

9 comments:

  1. Thanks for the reader from New Delhi

    ReplyDelete
  2. Thanks for the reader from Madars

    ReplyDelete
  3. சூரத் தனங்கலெல்லாம் > சூரத்தனங்க ளெல்லாம், புண்ணிய மெய்துடுவோம் > புண்ணியமெய்திடுவோம் எனத் திருத்துக.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    ReplyDelete
  4. பாரதி பாட்டு பரவசம்

    ReplyDelete
  5. ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -பராசக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
    ஓம்சக்தி ஓம்சக்தி- ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

    1.கணபதிராயன் -
    அவனிரு
    காலைப் பிடித்திடுவோம்
    குணமுயர்ந்திடவே-
    விடுதலை
    கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

    2.சொல்லுக்கடங்காவே-
    பராசக்தி
    சூரத்தனங்கலெல்லாம்;
    வல்லமை தந்திடுவாள்-பராசக்தி
    வாழியென்றே துதிப்போம் (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

    3.வெற்றிவடிவேலன் -அவனுடை
    வீரத்தினைப் புகழ்வோம்;
    சுற்றிநில்லாதே போ!-பகையே!
    துள்ளிவருகுது வேல்
    (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

    4.தாமரைப்பூவினிலே -சுருதியைத்
    தனியிருந்துரைப்பாள்
    பூமணித் தாளினையே-
    கண்ணிலொற்றிப்
    புண்ணியம் எய்திடுவோம்
    ( ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

    5.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும்
    பாதத்தினைப் புகழ்வோம்
    மாம்பழ வாயினிலே -குழலிசை
    வண்மை புகழ்ந்திடுவோம்
    (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

    6.செல்வத் திருமகளைத்-
    திடங்கொண்டு
    சிந்தனை செய்திடுவோம்
    செல்வம் எல்லாந்தருவாள்-
    நமதொளி
    திக்கனைத்தும்
    பரவும்

    ReplyDelete
  6. அருமையான தெய்வீக இலக்கிய சேவை . வாழ்க வளமுடன்.‌

    ReplyDelete
  7. அம்மன் துணை

    ReplyDelete
  8. ஓம் சக்தி பராசக்தி

    ReplyDelete