Thursday, June 7, 2012

.தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே-thoondirpuzhuvinaipol -veliye

டீ 

1.தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே 
சுடர் விளக்கினைப்போல்.
நீண்ட பொழுதாக-எனது 
நெஞ்சு துடித்த தடீ 
கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை 
கொண்டு மிகவு நொந்தேன்.
வேண்டும் பொருளையெல்லாம்-மனது 
வெறுத்து விட்ட தடீ 
2.பாயின் மிசைநானும்-தனியே 
படு திருக்கையிலே 
தாயினக் கண்டாலும் -ஸகியே 
வளர்த்து பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன் -ஸகியே
நுங்களுற வை யெல்லாம்.
3.உணவு செல்லவில்லை-ஸகியே 
உறக்கம் கொள்ளவில்லை,
மனம் விரும்பவில்லை-ஸகியே 
மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதியில்லை;எதிலும் 
குழப்பம் வந்ததடீ;
கனமு முள்ளத்திலே-சுகமே 
காணகிடைத்ததில்லை.    
4.பாலுங் கசந்த தடீ -ஸகியே
படுக்கை நொந்ததடீ 

கோலக் கிளி மொழியும் -செவியில் 
குத்த லெடுத்ததடீ.
நாலு வ யித்தியரும்-இனிமேல் 
நம்புதற் கில்லை  என்றார்;
பாலத்து சோசியனும்-கிரகம் 
படுத்து மென்று விட்டான்.
5.கனவு கண்டதிலே -ஒருநாள் 
கண்ணுக்கு தோன்றாமல், 
இனம் வினங்கவில்லை,-எவனோ 
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்த்தேன்;ஸகியே 
மேனி மறைந்து விட்டான் 
மனதில் மட்டிலுமே-புதிதோர் 
மகிழ்ச்சி கண்டதடீ. 
6.உச்சி குளிர்ந்ததடீ;ஸகியே 
உடம்பு நேராச்சு 
மச்சிலும் வீடுமெல்லாம் -முன்னைப்போல் 
மண த்துக் கொத்தடீ 
இச்சை பிறந்ததடீ -எதிலும் 
இன்பம் விளைந்த்தடீ.
அச்ச மொழிந்ததடீ;-ஸ கியே 
அழகு வந்ததடீ.
7.எண்ணும் பொழுதி லெல்லாம்,-அவன்கை 
இட்ட விடத்திதினிலே 
தண் ணன் றிருந்ததடீ;-புதிதோர் 
சாந்தி பிறந்ததடீ;
எண்ணி எண்ணிப் பார்த்தேன்;-அவன்தான் 
யாரெனச் சிந்த செய்தேன்;
கண்ணன் திருவுருவம்-அங்ங்னே
கண்ணின் முன் நின்றதடீ  

No comments:

Post a Comment