Sunday, June 10, 2012

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்-thayin manikodi parir-athai






பல்லவி 

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் 
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட  வாரீர் 
சரணங்கள் 
1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் 
உச்சியின் மேல்  வந்தே மாதர மென்றே 
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய 
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!


2.பட்டுத்  துகிலென லாமோ?-அதிற் 
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று 
மட்டு மிகுந்தடித்தாலும் -அதை 
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப்  படலம்(தாயின்)

3.இந்திரன் வச்சிர மோர்பால்-அதில் 
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன் 
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)

4.கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் -எங்கும் 
காணரும் வீரர் பெருந்திருக்  கூட்டம் 
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள் 
நால்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.(தாயின்

5.அணியணி யாயவர் நிற்கும்-இந்த 
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ? 
பணிகள் பொருந்திய மார்பும் -வீறற் 
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்!(தாயின்) 

6.செந்தழ்நாட்டுப் பொருநர் -கொடுந் 
தீக்கண் மறவர்கள் , சேரன்றன் வீரர் 
சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின் 
சேவடிக் கேபணி செய்துடு துளுவர் .(தாயின்)

7.கன்னட ரொட்டியரோடு -போரிற் 
காலனு மஞ்சக் கலக்கு மராட்டர் 
பொன்னகர்த் தேவர்க் கொளப்ப- நிற்கும் 
பொற்புடை யாரிந்து ஸ்தானது மல்லர்.  (தாயின்)

8..பூதல முற்றிடும் வரையும் -அறப் 
போர்விறல் யாவும் மரப்புறும் வரையும் 
மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில் 
மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர் (தாயின்)

9.பஞ்ச நததுப் பிறந்தோர் -முன்னைப் 
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார் 
துஞ்சும்பொழுதினுந் தாயின் -பதத் 
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

10.சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர் 
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத -நிலத் 
தேவி துவஜம் சிறப்புற வாழ்க (தாயின்)

10 comments: