Tuesday, March 27, 2012

விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்-vittu viduthayahi nirpaa yinthach





பல்லவி 
விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.
1,எட்டு திசையும் பறந்து திரிகுவை 
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை 
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் 
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)

2.பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்  
பீடையி லாததொர்  கூடுகட் டிக்கொண்டு 
முட்டை தருங்குஞ்சை  காத்து மகிழவைதி 
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
3.முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும் 
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு 
மற்ற பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் 
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)


Friday, March 23, 2012

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை -villinai otha puruvam valaithanai

1.வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
          வேலவா! அங்கொர்
   வெற்பு நொறிங்கிப் பொடிப்பொடி
           யானது, வேலவா!
    சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
            வள்ளியைக் -கண்டு
    சொக்கி மரமென நின்றனை தென்மலைக்
             காட்டிலே
     கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
             பாதகன் - சிங்கன்
     கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட
             வேலவா!
      பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
              வள்ளியை - ஒரு
       பார்ப்பனக் கோலந தரித்துக் கரந தொட்ட
              வேலவா!
2.வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
               கடலினை - உடல் 
   வெம்பி மருகி சுருக்கிப் புகைய
               வெருட்டினாய்.
   கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும் பெயர்ச்
                செல்வத்தை- என்றும் 
   கேடற்ற வாழ்வினை யின்ப விளக்கை 
                மருவினாய்
   கொள்ளை கொண்  டே அம ராவதி வாழ்வு 
                 குலைத்தவன் - பானு 
   கோபன் தலை பத்துக் கோடித் துணுக்குறக் 
                  கோபித்தாய்
   துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன் 
                  மானைப்போல் - தினைத்
    தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்
                  கொண்ட வேலவா!
3, ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப 
                  மாகுதே - கையில் 
     அஞ்சலெ னுங்குறி கண்டு மகிழ்ச்சியுண்
                   டாகுதே.
     நீறு படர்க்கொடும் பாவம் பிணிபசி 
                    யாவையும் - இங்கு
     நீக்கி யடியரை நித்தமுங் காத்திடும் 
                    வேலவா!
      கூறு படப்பல கோடி யவுணரின் 
                    கூட்டத்தை- கண்டு 
     கொக்கரித் தண்டங் குலுங்க நகைதிடுஞ் 
                    சேவலாய்!
      மாறு படப்பல வேறு வடிவொடு
                    தோன்றுவாள் - எங்கள் 
      வைரவி பெற்ற பெருங்கன லே, வடி 
                      வேலவா!


                    


     

     
               

Thursday, March 22, 2012

நெஞ்சி லுரமுமின்றி -nenjil uramuminri

1. நெஞ்சி லுரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வரரடி -கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
2.கூட்டத்தில் கூடிநின்று 
கூவிப் பிதற்றல்லன்றி
நாட்டத்திற் கொள்ளரடீ -கிளியே
நாளில் மறப்பாரடீ,
10.அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடி -கிளியே
ஊமைச் சனங்களடீ.
11.ஊக்கமும் உள்வலியும் 
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் -கிளியே
வாழதகுதியுண்டோ
16. சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை யிரன்காரடீ -கிளியே
செம்மை மறந்தாரடீ. 

Note: Other stanzas omitteed in the song












நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்-nenujukku neethiyum tholukku vaalum

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
     நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்
     பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
     வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் சக்தி
     ஓம் சக்தி , ஓம்சக்தி, ஓம்
2.நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி
      நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்
      அறைந்திடு வாய்முரசே
சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச்
      சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும்
     ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
3.நம்புவதேவழி என்ற மறைதன்னை
       நாமின்று நம்பிவிட்டோம்
   கும்பி ட்டேந நேரமும் "சக்தி" யென்றாலுனைக்
        கும்பிடுவேன் மனமே .
    அன்புக்குந தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
         அச்சமில்லாதபடி .
    உம்பர்க்கும் மிமபர்க்கும் வாழ்வு தரும்
          ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
5. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
           ளாக விளங்கிடுவாய்!
     தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
            விண்ணப்பம் செய்துடுவேன் .
     எள்ளத் தனைபபோழு துமபய னின்றி
             யிராதென்றன் நாவினிலே
      வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
             வேல்சக்தி வேல்சக்தி வேல்!
Note: 4th stanza omitted in the song