Monday, April 30, 2012

ஆசை முகம் மறந்து போச்சே -இதை - asai mukam maranthu poche

1.ஆசை முகம் மறந்து போச்சே -இதை 
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில் 
நினைவு முகமறக்க லாமோ?

2.கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில் 
கண்ண னழகு முழிதில்லை;
நண்ணு முகவடிவு கானில் - அந்த 
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.

3.ஒய்வு மொழிதலுமில் லாமல் - அவன் 
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -அந்த 
மாயன் புகழினை யெப்போதும் .

4.கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க் 
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே- ௦ஒரு 
பேதையை முன்பு கண்டதுண்டோ?

5.தேனை மறந்திருக்கும் வண்டும் -ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும் 
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த 
வைய முழுதுமில்லை தோழி 

6.கண்ணன் முகமறந்து போனால் -இந்தக் 
கண்க ளிருந்துபய னுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் -இனி 
வாழும் வழியென்னடி தோழி 

Note:Stanzas 3,4, and 5 are not sung by the artist





Classical Dance - Roja Kannan - Kannan Mananilayai.m4v


Note 2:A vistor from Mountain view, California visited the dance uploaded for this song on 17/7/2012.I searched the internet again and found that the song sung by Smt.Nithyashee was available.
I have uploaded this today with lyrics


1.கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -
                                                               அடி தங்கமே தங்கம்
கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்,
ஏதேனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். 

2.கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அந்நிய மன்னர்மக்கள் பூமியிலுண்டாம் என்னும் 
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். 

3.சொன்ன மொழிதவறு மன்னவனு க்கே எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?அவை
யாவுந் தெளிவு பெறக் கேட்டு விடடீ.

4.மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-
தலை மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே -கிழப் 
பொன்னி யுரைதததுண்டு தங்கமே தங்கம். 

5.ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை 
அழைத்துத் தனியிடத்திற் பேசிய தெல்லாம் 
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே 
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.

6.சோர மிழைத்திடையர் பெண்க ளுடனே அவன்
சூழ்ச்சித் திறமைபல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே 
வேண்டிய தில்லையென்று சொல்லிவிடடீ.

7.பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் -மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்-அதைப் 
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.

8.நேர முழுதிலுமப் பாவிதன்னையே - உள்ளம் 
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-
தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -kannan mananilaiyai thangame thangam




1.கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -
                                                               அடி தங்கமே தங்கம்
கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்,
ஏதேனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். 



2.கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அந்நிய மன்னர்மக்கள் பூமியிலுண்டாம் என்னும் 
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். 

3.சொன்ன மொழிதவறு மன்னவனு க்கே எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?அவை
யாவுந் தெளிவு பெறக் கேட்டு விடடீ.

4.மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-
தலை மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே -கிழப் 
பொன்னி யுரைதததுண்டு தங்கமே தங்கம். 

5.ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை 
அழைத்துத் தனியிடத்திற் பேசிய தெல்லாம் 
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே 
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.

6.சோர மிழைத்திடையர் பெண்க ளுடனே அவன்
சூழ்ச்சித் திறமைபல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே 
வேண்டிய தில்லையென்று சொல்லிவிடடீ.

7.பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் -மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்-அதைப் 
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.

8.நேர முழுதிலுமப் பாவிதன்னையே - உள்ளம் 
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-
தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்.


Note:the lines in red are sung by the artist
Note 2:A vistor from Mountain view, California visited the dance uploaded for this song on17/7/2012.
I searched the internet again and found that the song sung by Smt.Nithyashee was available.

I have uploaded this today

Friday, April 27, 2012

பகைவனுக் கருள்வாய்நன்னெஞ்சே -pakaivanukkarulvaai

பகைவனுக் கருள்வாய் -நன்னெஞ்சே  
பகைவனுக்கருள்வாய் 

1.புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே -நன்னெஞ்சே 
பூமியிற் கண்டோமே 
பகை நடுவினில் அன்புருவான நம் 
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே 
பரமன் வாழ்கின்றான் (பகைவனுகருள்வாய்)

2.சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யரியாயோ - நன்னெஞ்சே 
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக் 
கொடிவள றாதோ? நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

3.உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில் 
உள்ள நிறைவாமோ?-நன்னெஞ்சே 
தெள்ளிய தேனிலொர் சிறுது நஞ்சையும் 
சேர்த்தபின் தேனாமோ?நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

4.வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது 
வாழ்வுக்கு நேராமோ?நன்னெஞ்சே 
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்ற 
சாத்திரங் கேளாயோ?நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

5.போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலுவந் தானுமவன் -நன்னெஞ்சே 
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொன்டு
நின்றதுங் கண்ண னன்றோ?-நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

6.தின்ன வரும் புலி தன்னையு மன்பொடு 
சிந்தையிற் போற்றிடுவாய் -நன்னெஞ்சே 
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் -நன்னெஞ்சே (பகவனுக்கருள்வாய்)