Friday, April 27, 2012

பகைவனுக் கருள்வாய்நன்னெஞ்சே -pakaivanukkarulvaai

பகைவனுக் கருள்வாய் -நன்னெஞ்சே  
பகைவனுக்கருள்வாய் 

1.புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே -நன்னெஞ்சே 
பூமியிற் கண்டோமே 
பகை நடுவினில் அன்புருவான நம் 
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே 
பரமன் வாழ்கின்றான் (பகைவனுகருள்வாய்)

2.சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யரியாயோ - நன்னெஞ்சே 
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக் 
கொடிவள றாதோ? நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

3.உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில் 
உள்ள நிறைவாமோ?-நன்னெஞ்சே 
தெள்ளிய தேனிலொர் சிறுது நஞ்சையும் 
சேர்த்தபின் தேனாமோ?நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

4.வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது 
வாழ்வுக்கு நேராமோ?நன்னெஞ்சே 
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்ற 
சாத்திரங் கேளாயோ?நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

5.போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலுவந் தானுமவன் -நன்னெஞ்சே 
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொன்டு
நின்றதுங் கண்ண னன்றோ?-நன்னெஞ்சே (பகைவனுக்கருள்வாய்)

6.தின்ன வரும் புலி தன்னையு மன்பொடு 
சிந்தையிற் போற்றிடுவாய் -நன்னெஞ்சே 
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் -நன்னெஞ்சே (பகவனுக்கருள்வாய்)



No comments:

Post a Comment