Friday, March 23, 2012

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை -villinai otha puruvam valaithanai

1.வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
          வேலவா! அங்கொர்
   வெற்பு நொறிங்கிப் பொடிப்பொடி
           யானது, வேலவா!
    சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
            வள்ளியைக் -கண்டு
    சொக்கி மரமென நின்றனை தென்மலைக்
             காட்டிலே
     கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
             பாதகன் - சிங்கன்
     கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட
             வேலவா!
      பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
              வள்ளியை - ஒரு
       பார்ப்பனக் கோலந தரித்துக் கரந தொட்ட
              வேலவா!
2.வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
               கடலினை - உடல் 
   வெம்பி மருகி சுருக்கிப் புகைய
               வெருட்டினாய்.
   கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும் பெயர்ச்
                செல்வத்தை- என்றும் 
   கேடற்ற வாழ்வினை யின்ப விளக்கை 
                மருவினாய்
   கொள்ளை கொண்  டே அம ராவதி வாழ்வு 
                 குலைத்தவன் - பானு 
   கோபன் தலை பத்துக் கோடித் துணுக்குறக் 
                  கோபித்தாய்
   துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன் 
                  மானைப்போல் - தினைத்
    தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்
                  கொண்ட வேலவா!
3, ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப 
                  மாகுதே - கையில் 
     அஞ்சலெ னுங்குறி கண்டு மகிழ்ச்சியுண்
                   டாகுதே.
     நீறு படர்க்கொடும் பாவம் பிணிபசி 
                    யாவையும் - இங்கு
     நீக்கி யடியரை நித்தமுங் காத்திடும் 
                    வேலவா!
      கூறு படப்பல கோடி யவுணரின் 
                    கூட்டத்தை- கண்டு 
     கொக்கரித் தண்டங் குலுங்க நகைதிடுஞ் 
                    சேவலாய்!
      மாறு படப்பல வேறு வடிவொடு
                    தோன்றுவாள் - எங்கள் 
      வைரவி பெற்ற பெருங்கன லே, வடி 
                      வேலவா!


                    


     

     
               

3 comments: