Saturday, June 16, 2012

செந்தமிழ்நாடென்னும் போதினிலே -இன்பத்-senthamiznatennum pothinile-inbath






1.செந்தமிழ்நாடென்னும் போதினிலே -இன்பத் 
தேன் வந்து பாயுது காதினிலே -எங்கள் 
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -ஒரு 
சக்தி பிறக்குது மூச்சினிலே எங்கள் (செந்தமிழ்)

2.வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் 
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல 

காதல் புரியும் அரம்பையர் போலிளங் 
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3.காவிரி தென்பண்னை பாலாறு -தமிழ் 
கண்டதோர் வையை பொருனைநதி -யென 
மேவிய யாறு பலவோடத் - திரு 
மேனி செழித்த தமிழ்நாடு(செந்தமிழ்)  

4.முத்தமிழ் மாமுனி நீள்வரையே -நின்று 
மொய்ம்புறக்காக்குந் தமிழ்நாடு-செல்வம் 
எத்தன யுண்டு புவிமீதே - அவை 
யாவும் படைத்த தமிழ்நாடு-(செந்தமிழ்)

5.நீலத் திரைக்கட லோரத்திலே -நின்று 
நித்தந் தவஞ்செய் குமரியெல்லை-வட 
மாலவன் குன்றம் இவற்றிடை யே புகழ் 
மண்டிக்கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

6.கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் 
கம்பன் பிறந்த தமிழ்நாடு -நல்ல 
பலவித மாயின சாத்திரத் தின்மணம் 
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு (செந்தமிழ்)


7.வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து 
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை 
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி 
யாரம் படைத்த தமிழ்நாடு  (செந்தமிழ்)

8.சிங்களம் புட்பகம் சாவக-மாகிய 
தீவு பலவினுஞ் சென்றேறி -அங்கு 
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும் நின்று 
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

9.விண்னை யிடிக்கும் தலையிமயம்-எனும் 
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் 
பண்ணிக் கலிங்கத் திருள் கெடுத் தார்தமிழ்ப்ப் 
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

10.சீனம் மிசிரம் யவனரகம் -இன்னும் 
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை 
ஞானம் படைத்தொழில் வாணிபமும்மிக 
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)


No comments:

Post a Comment