Sunday, November 28, 2010

ஓடி விளையாடு பாப்பா - நீ - Odi vilayaadu paappaa




.








1.ஓடி விளையாடு பாப்பா, - நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா ,
கூடி விளையாடு பாப்பா, -ஒரு 
குழந்தையை வையாதே பாப்பா. 


2,சின்னஞ்சிறு சிருகுகுவி போலே - நீ 
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ 
மனத்தில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா 


3.கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் 
கூட்டி விளையாடு பாப்பா 
எத்தித் திருடுமந்த காக்காய் -அதற் 
கிரக்கப்படவேணும் பாப்பா.


4.பாலைப் பொழிந்துதரும் பாப்பா-அந்தப் 
பசு நல்லதடி பாப்பா 
வாலைக் குழைந்துவரும் நாய்தான்-அது 
மனிதர்க்குத்  தோழனடி பாப்பா.


5.வண்டியிழுக்கும் நல்ல குதிரை -நெல்லு 
வாழி உழுதுவரும் மாடு, 
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,-இவை 
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

6.காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு 
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு 
மாலை முழுதும் விளையாட்டு -என்று 
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா 


7.பொய் சொல்லக்கூடாது பாப்பா-என்றும் 
புறஞ் சொல்ல லாகாது பாப்பா, 
தெய்வம் நமக்குத்துணை பாப்பா-ஒரு 
தீங்கு வரமாட்டது பாப்பா.


8..பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் 
பயம்கொள்ள லாகாது பாப்பா, 
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் 
முகத்தில் உமிழிந்துவிடு பாப்பா


9.துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் 
சோர்ந்துவிடலாகாது பாப்பா,
அன்மிகுந்த் தெய்வமுண்டு-துன்பம் 
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா


10.சோம்பல் மிகக்கெடுதிபாப்பா-தாய் 
சொன்ன சொல்லைத் தட்டாதேபாப்பா 
தேம்பி யழுங் குழந்தை  நொண்டி,-நீ 
திடங்கொண்டு போராடு பாப்பா   


11.தமிழ்த்திருநாடு தன்னைப் பெற்ற-எங்கள் 
தாயென்று கும்பிடடி பாப்பா.
அமிழ்தில் இனியதடி பாப்பா,-நம் 
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா 


12.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,-அதைத் 
தொழுது படித்திடடி பாப்பா,
செல்வம்நிறைந்த ஹிந்து ஸ்தானம் -அதைத் 
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.


13.வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில் 
வாழுங் குமரி முனை பாப்பா.
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்-இதன் 
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.


14.வேத முடையதிந்த நாடு-நல்ல 
வீரர் பிறந்தநாடு.
சேதமில் லாத ஹிந்துஸ்தானம்-இதைத் 
தெய்வமென்று குமிடடி பாப்பா.


15.சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் 
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி,கல்வி-அன்பு  
நிறைய உடையோர்கள் மேலோர்.


16.உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் 
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது 
வாழும் முறைமையடி பாப்பா. 

A visitor from Madras is viewing this post frequently.Now I have posted the full text of the song and  one more video.

15 comments:

  1. three visitors from US and one visitor from Jeddah,SAUTHI ARABIA VIEWED THIS BLOG TODAY

    ReplyDelete
  2. A visitor from Toronto, Ontario viewed this today

    ReplyDelete
  3. A visitor from Thana, Maharashtra viewed this yesterday

    ReplyDelete
  4. A visitor from Saudi Arabia viewed this today

    ReplyDelete
  5. A visitor from New Delhi viewed this yesterday

    ReplyDelete
  6. A visitor from NewDelhi viewed this today

    ReplyDelete
  7. A visitor from Dubai viewed this yesterday

    ReplyDelete
  8. A visitor from Japan viewed this today

    ReplyDelete
  9. A visitor from Porayar, Tamil Nadu viewed this today

    ReplyDelete
  10. A visitor from Meerat, UP viewed this yesterday

    ReplyDelete
  11. A visitor from De Pere, Wisconsin viewed this twice today

    ReplyDelete
  12. A visitor from Erode viewed this today

    ReplyDelete
  13. A visitor from Colombo, Western viewed this today

    ReplyDelete
  14. I wonder who is the visitor from Coimbatore today

    ReplyDelete
  15. எழுத்துப்பிழைகள் இல்லாமல் பதிவிட முயலுங்கள். பிழையை அப்படியே யாரேனும் நகலெடுத்து சமூக வலைத்தளங்களில் ஒட்டி பதிவிட நேரும். அப்பதிவை யாரேனும் அப்படியே மனனம் செய்யவும் கூடும். செய்யுளின் தன்மையே கெட்டுவிடும்.

    ReplyDelete