Wednesday, December 21, 2011


 எல்லா மாகிக் 

எல்லா மாகிக் கலந்து நிறைந்தப்பின் 
ஏழைமை யுண்டோடா? -மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின் 
புத்தி; மயக்க முண்டோ? 


உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின் 
உள்ளங் குலைவ துண்டோ - மனமே!
வெள்ள மெனம்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் 
வேதனை யுண்டோ டா?


சித்தி நியல்பு மதன்பெருஞ் சக்தியின் செயகையநீ தேர்ந்துவிட்டால் -மனமே!
எதனை கோடி இடர்வந்து சூழினும் 
எண்ணஞ் சிறிதுமுண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத் 
தேவ னுரைத் தன்னே; -மனமே!

பொய்கருதாம் லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கிக் திளைப்பவர்க் 
கச்ச முண்டோடா?- மனமே;

தேன்மடை யின்குத் திறந்து கண்டு 
தேக்கித் திரிவமடா!


No comments:

Post a Comment