Wednesday, July 18, 2012

தேடியுனைச்சரணடைந்தேன், தேசமுதுமாரி-

தேச முத்துமாரி 




1.தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுதுமாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்.

2.பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங்  களைவாய் 
கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாம் தீர்ப்பாய் 

3.எப்பொழுதுங் கவலையிலே இணங்கிநிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.

4.சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க்கவிதை பாடி.
பக்தியுடன் போற்றிநின்றால் பயமனைத்துந் தீரும்.

5.ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொழிலாம்.

8.துன்பமே யியற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்.

9.நம்பினார் கெடுவதில்லை;நன்குமறைத் தீர்ப்பு 

அம்பிகையை சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம் .

No comments:

Post a Comment