Wednesday, July 4, 2012

சுட்டும் விழி சுடர்தான்,- கண்ணம்மா!-suttum vizhi sudarthan kannamma!






1.சுட்டும் விழி சுடர்தான்,- கண்ணம்மா!

 சூரிய சந்திரரோ?
வட்டக்கரியவிழி,-கண்ணம்மா! 
வானக்கருமை  கொள்லோ?
பட்டுகருநீலப்-புடவை 
பதித்த நல்வயிரம் 
நட்டநடுநிசியில் -தெரியும் 
நட்சதிரம்களடீ!

2.சோலைமல ரொளியோ- உனது 
சுந்தரப் புன்னகைதான்? 
நீலகட லலையே - உனது 
நெஞ்சில லைகளடீ! 
கோலக்குயி லோசை -உனது 
குரலி னிமையடீ  
வாலைக் குமரியடீ,-கண்ணம்மா 
மருவக் காதல் கொண்டேன் 

3.சாத்திரம் பேசுகிறாய் -கண்ணம்மா 
சாத்திரமேதுக்கடீ?
ஆத்திரம் கொண்டவர்க்கே,- கண்ணம்மா 
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில்-வதுவை 
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ? இது பார்,

கன்னத்து முத்த மொன்று!

1 comment: