Sunday, July 15, 2012

பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payumoli neeyenakku,parkum vizhi nanunakku



  பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு
      தோயுமது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு.
 வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
      தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!1
வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
      பூணும் வடம்  நீயெனக்கு, புது வயிர நானுனக்கு;
காணுமிடந  தோறு நின்றன் கணணி னொளி வீசுதடீ 
      மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!2

வானமழை நீயெனக்கு,வண்ணமயில் நானுனக்கு;
     பானமடி நீயெனக்கு, பாண்டமடி  நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்,
      ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!3

வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு; 
      பண்ணுசுதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணி யெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை!
                                                                                     நின் சுவைக்கே 
     கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!4

காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு; 
     வேதமடி நீயெனக்கு விந்தையடி நானுனக்கு; 
போதமுற்ற போதினிலே பொங்கிவருந்  தீஞ்சுவையே!
     நாதவடி வானவளே ! நல்லயுயிரே! கண்ணம்மா!5


வீசு கமழ நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீயெ னக்கு, பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே!நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!  அள்ளுசுவையே கண்ணம்மா 6

நல்லுயிர் நீயெனக்கு நா டியடி நானுனக்கு; 
செல்வமடி நீயெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழ்கே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!7

தாரயடி நீயெனக்கு,   தண்மதியம் நானுனக்கு:
வீரமடி நீயெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
 தாரணியில் வானுலகில்  சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் 
ஒருருவாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!8

1 comment: