Tuesday, July 17, 2012

எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி-enthaiyum thayum mahizhnindu kulave




Note: A visitor from Mountainview, California visited the video uploaded by me separately today-17/7/2012. I have uploaded the video with the lyrics of the song.

1.எந்தையுந்  தாயு மகிழ்ந்து குலாவி 
     யிருந்தது மிந்நாடே -அதன் 
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து 
    முடிந்தது மிந்நாடே -அவர் 
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து 
    சிறந்தது மிந்நாடே -இதை 
வந்தனை கூறி மனதி லிருத்தியென் 
     வாயுற வாழ்த்தேனோ -இதை 
வந்தே மாதரம், வந்தே மாதரம் 
     என்று வணங்கேனோ?

2.இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு 
      ளீந்தது மிந்நாடே -எங்கள் 
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி 
    அறிந்தது மிந்நாடே -அவர் 
கன்னி யராகி நிலவினி லாடிக் 
     களித்தது மிந்நாடே -தங்கள் 
பொன்னுட லின்புற நீர்வினை யாடியில் 
    போந்தது மிந்நாடே -இதை 
வந்தே மாதரம், வந்தே மாதரம் 
     என்று வணங்கேனோ?

3.மங்கைய ராயவர் இல்லற நன்கு 
     வளர்த்தது மிந்நாடே -அவர் 

தங்க மதலைக்  ளீன்றமு தூட்டித் 
     தழுவி திந்நாடே -மக்கள் 
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் 
     சூழ்ந்தது மிந்நாடே -பின்னர் 
அங்கவர் மாய அவருடற் பூந்துகள் 
    ஆர்ந்தது மிந்நாடே -இதை 
வந்தே மாதரம்,வந்தே மாதரம் 
     என்று வணங்கேனோ?

5 comments:

  1. முழுவதுமாகப் பாடுங்கள் அய்யா

    ReplyDelete
  2. மிக அருமை 👌🏽👌🏻

    ReplyDelete