Thursday, August 16, 2012

திக்குதெரியாதகாட்டில்உன்னை-thikkutheryatha kattil unnai

திக்கு தெரியாத காட்டில் உன்னை 



திக்குத் தெரியாத காட்டில்-உன்னைத் 
தேடித் தேடி இளைத்தேனே..

1.மிக்க நலமுடைய மரங்கள், - பல 
விந்தைச் சுவையுடைய கனிகள் -எந்தப் 
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் ,-அங்கு 
பாடி நகர்ந்து வரும் நதிகள்,-ஒரு (திக்குத்)

2.நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள் -எங்கும் 
நீலக் கிடக்குமிலைக் கடல்கள்,-மதி 
வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,- முட்கள் 
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள் -ஒரு (திக்குத்)

3.அச்சை பெற விழிக்கும் மான்கள்,- உள்ளம் 
அஞ்சக் குரல்பழகும் புலிகள்,-நல்ல 
செசக் கவிதைசொலும் பராவை,-அங்கு 
நீண்டே படுத்திருக்கும் பாம்பு-ஒரு (திக்குத்)

4.தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன் 
சத்தத்தி நிற்கலங்கும் யானை -அதன் 
முன்னின்ரோ டுமிள  மான்கள்- இவை 
முட்டா தயல்பதுங்குத் தவளை -ஒரு (திக்குத் )

5.கால்கை சோர்ந்து விழ லானேன்-இரு 
கண்ணும் துயில்படர லானேன்-ஒரு 
வேல்கைக் கொண்டுகொலை வேடன்
வெட்கங்கொண்டோழிய விழித்தான்-ஒரு (திக்குத்)

6".பெண்ணே,உனதழகைக் கண்டு-மனம் 
பித்தங்கொள்ளு " தென்று நகைத்தான்-"அடி 
கண்ணே, எனதிருகண்மணியே -உனைக் 
கட்டித் தழுவமனங்கொண்டேன்

7.சேர்ந்தே படுதிருக்கலாமோ?-நல்ல 
துண்டக் கறிசமைத்துத் தின்போம் -சுவை 
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன்-நல்ல 
தேங் கள்ளுண்டினிது  களிப்போம்." (திக்குத்)   

8.என்றே கொடியவிழிவேடன்-உயிர
 இற்றுப் போக விழி துரைத்தான்-தனி 
நின்றே இருகரமுங் குவித்து -அந்த 
நீசன் முன்னறிவை சொல்வேன்.

9."அண்ணா, உனதடியில் வீழ்வேன்-எனை 
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன் 
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை- உன்றன் 
கன்னர் பார்திடவுந் தகுமோ?"

10.ஏடி சாத்திரங்கள் வேண்டேன் -நின் 
தின்பம் வேண்டுமடி , தனியே நின்றன் 
மோடி கிறுக்குதடி தலையை -நல்ல 
மொந்தைப் பழைய கல்லைப் போல."

11.காதாலிந்தவுரை  கேட்டேன்-"அட 
கண்ணா"வென்றலறி வீழ்ந்தேன்-மிகப் 
போதாக வில்லையிதற குள்ளே என்றன் 
போதந் தேல்யநினைக் கண்டேன். 

12.கண்ணா, வேடநேங்கு போனான்?-உனைக் 
கண்டே யலரிவிழுந் தானோ?-மணி 
வண்ணா? எனதபயக்குரலில்-எனை 
வாழ்விக்க வந்த அருள் வாழி

No comments:

Post a Comment