Tuesday, August 28, 2012

பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள்-Parukkulle nalla nadu-engal




பல்லவி 
பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள் 
பாரத நாடு 

சரணங்கள் 
1.ஞானத்தி லேபர மோனத்திலே உயர் 
மானத்தி லே அன்ன தானத்திலே 
கானத்தி லேஅமு தாக நிறைந்த 
கவிதையி லே யுயர் நாடு இந்தப் (பாரு)

2.தீரத்தி லேபடை வீரத்திலே -நெஞ்சில் 
ஈரத்தி லேஉப காரத்திலே 
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு 
தருவதி லே யுயர் நாடு இந்தப் (பாரு)

3.நன்மையி லேயுடல்   வன்மையிலே -செல்வப் 
பன்மையி லேமறத் தன்மையிலே 
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின் 
புகழினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

4.ஆக்கத்தி லே தொழி லூக்கதிலே -புய 
வீக்கத்தி லேமறத் தன்மையிலே 
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைத் 
கடலினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

5.வன்மையி லேயுளத்  திண்மையிலே -மனத் 
தன்மையி லேமதி நுண்மையிலே 
உண்மையி லேதவ றாத புலவர் 
உணர்வினி லே யுயர் நாடு இந்தப்(பாரு )

6.யாகத்தி லேதவ வேகத்திலே -தனி 
யோகத்தி லேபல போகத்திலே 
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லே யுயர் நாடு இந்தப்(பாரு) 

7.ஆற்றினி லே சுனை யூற்றினிலே -தென்றல் 
காற்றினி லேமலைப் போற்றினிலே
 ஏற்றினி லேபய னீ ந் திடுங் காலி 
யினத்தினி லே யுயர் நாடு இந்தப்(பாரு) 

8.தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே -கனி 
யீ ட்டத்தி லேபயி ரூட்டத்திலே 
தோட்டத்தி லேயடங் காத  நிதியின் 
சிறப்பினி லே யுயர் நாடு இந்தப்(பாரு)

No comments:

Post a Comment