Saturday, August 25, 2012

கனிகள்கொண்டுதரும்கண்ணன்-Kanikal kondutharum kannan


கண்ணன் என் காந்தன் 

கனிகள் கொண்டுதரும் கண்ணன் 
கற்கண்டு போலினிதாய்; 
பனிசெய் சந்தனமும் - பின்னும்
பல்வகை யத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் - கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே - வண்ண
மியன்ற சவ்வாதும்.

கொண்டை முடிப்பதற்கே - மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே - கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
பேசருந் தெய்வமடீ!

குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம் - தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல் - முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ - பின்னோர்
வருத்த மில்லையடீ. 

No comments:

Post a Comment