Tuesday, August 14, 2012

பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு-payumoli nanunakku, parkum vizhi nanuakku- meaning of lines




wanted to know the meaning of certain lines in this poem.Though I am not a tamil scholar I have given themeaning to the best of knowledge

பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு 
      தோயுமது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு.
 வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
      தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!1

வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
      பூணும் வடம் நீயெனக்கு, புது வயிர நானுனக்கு
காணுமிடந  தோறு நின்றன் கணணி னொளி வீசுதடீ 
      மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!2

வானமழை நீயெனக்கு,வண்ணமயில் நானுனக்கு;
     பானமடி நீயெனக்கு, பாண்டமடி  நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்,
      ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!3

வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு; 
      பண்ணுசுதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணி யெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை!
                                                                                    நின் சுவைக்கே 
     கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!4

காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு; 
     வேதமடி நீயெனக்கு விந்தையடி நானுனக்கு; 
போதமுற்ற போதினிலே பொங்கிவருந்  தீஞ்சுவையே!
     நாதவடி வானவளே ! நல்லயுயிரே! கண்ணம்மா!5

வீசுகமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீயெ னக்கு, பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே!நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!  அள்ளுசுவையே கண்ணம்மா 6

நல்லுயிர் நீயெனக்கு நா டியடி நானுனக்கு; 
செல்வமடி நீயெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழ்கே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!7
 
தாரையடி நீயெனக்கு,  தண்மதியம்  நானுனக்கு:
வீரமடி நீயெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
 தாரணியில் வானுலகில்  சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் 
ஒருருவாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!8

1.தும்பி=தேனீ, கரும்பு   சூறை=கொள்ளை 
-
2.பூணும்=அணியும் வடம்=கயிறு,மாலை 
 புது வயிர  நானுனக்கு=புது வாழ்வளிப்பவர்
You type புது வயிர நானுனக்கு and you get the meaning

3.பாண்டம்=பாத்திரம் 
ஊனமறு =குறையற்ற

4.மேவு=fill up , நிரவு ; 2 . desire , love , விரும்பு ; 3 . make the ground even , level , சமனாக்கு ;  ; 5 . join , combin
பண்ணு=செய் , படை , உருவாக்கு 
 சுதி=சுருதி ; 2 . an instrument accompaniment to an air .

5.போதமுற்ற=போதம்= ஸ்மரணை,ஞாபகம்,consciousness 
நாதவடிவானவள்=நாதம்+வடிவு
நாதம்=குரல் உணர்ச்சி , நயம் 
வடிவு=தோற்றம் 

6.வீசு=தெளி
கமழ்=  yield a fragrant smell 

7.நல்லுயிர்  நாடியடி= உயிர்நாடி=நீ உயிர் என்றால் நான் நாடி 

8.தாரை=stream : தாரை, a star,கண்மணி(the pupil of the eye) , ,நீர்வீழ்ச்சி ,
நீர் ஊற்று ,a star , விண்மீன்
தண்மதி=நிலா (தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் ஆம்பல்= water-lily : ஆம்பல் , அல்லி



4 comments:

  1. The visitor from Mountain view,California viewed this post two times today

    ReplyDelete
  2. A visitor from Kuwait, Al Kuwayat viewed this post today

    ReplyDelete
  3. A visitor from Horsholm, Denmark visited this post yesterday.Another visitor from Singapore viewed this post today

    ReplyDelete
  4. The visitor from New delhi viewed this today

    ReplyDelete