Sunday, May 6, 2012

வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா -varuvai, varuvai, varuvai-kanna


பல்லவி 
வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா 
வருவாய் , வருவாய் வருவாய்.

சரணம் 
1.உருவாய் அறிவில் ஒளிர்வாய் -கண்ணா 
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் -கண்ணா 
கருவாய் என்னுள் வளர்வாய் -கண்ணா 
கமலத் திருவோ டினைவாய் -கண்ணா

2. இணைவாய் எனதா வியிலே - கண்ணா 
இதயத் தினிலே யமர்வாய் -கண்ணா 
கனைவா யசுரர் தலைகள் சிதறக் 
கடையூ ழியிலே படையோ டெழுவாய் -கண்ணா 

3.எழுவாய் கடல்மீ தனிலே -  எழுமோர் 
இரவிக் கினையா உள மீதினிலே 
தொழுவேன் சிவனாம் ச்நினையே -கண்ணா 
துணையே, அமரர் தொழும்வா னவனே!-கண்ணா 

No comments:

Post a Comment