1.ஆசை முகம் மறந்து போச்சே -இதை 
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில் 
நினைவு முகமறக்க லாமோ?
2.கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில் 
கண்ண னழகு முழிதில்லை;
நண்ணு முகவடிவு கானில் - அந்த 
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.
3.ஒய்வு மொழிதலுமில் லாமல் - அவன் 
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -அந்த 
மாயன் புகழினை யெப்போதும் .
4.கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க் 
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே- ௦ஒரு 
பேதையை முன்பு கண்டதுண்டோ?
5.தேனை மறந்திருக்கும் வண்டும் -ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும் 
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த 
வைய முழுதுமில்லை தோழி 
6.கண்ணன் முகமறந்து போனால் -இந்தக் 
கண்க ளிருந்துபய னுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் -இனி 
Note:Stanzas 3,4, and 5 are not sung by the artist
 
