Showing posts with label Bharathiyar-Nithyashree Mahadevan. Show all posts
Showing posts with label Bharathiyar-Nithyashree Mahadevan. Show all posts

Monday, July 16, 2012

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-villinai othapuruvam valaiththanai



வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி 
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
வல்லியைக்-கண்டு   
சொக்கி மரமென நின்றனை 
தென்மலைக் காட்டிலே 
கல்லினை ஒத்த வலிய மனங்கொண்ட 
பாதகன்-சிங்கன் 
கண்ணிரண் டாயிரங் காக்கைக் 
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு 
பார்ப்பனக் கோலந் தரித்துக் 
கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டிமுழ்ங்குங் 
கடலினை-உடல் 
வெம்பி மறுகிக் கருகிக் 
புகைய வெருட்டினாய்.  
கிள்ளை மொழிச்சிறு வள்ளி  யெனும்பெயர்ச் 
செல்வத்தை-என்றும் 
கேடற்ற வாழ்வினை-இன்ப 
விளக்கை மறுவினாய்.

கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு 
குலைத்தவன்-பானு 
கோபன் தலைபத்துக் கோடி  
துணுக்குறக்  கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்  
மானைப்போல்-தினைத் 
தோட்டத்திலேயொரு பெண்ணை 
மனங்கொண்ட வேலவா! 
ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கினன்ப 
மாகுதே;-கையில் 
அஞ்சலெனுங்க்குறி கண்டு 
மகிழ்ச்சி யுன்டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி 
யாவையும்-இங்கு 
நீக்கி அடியரை நித்தமுங் 
காத்திடும  வேலவா!
கூறு பலபலப் கோடி யவுணரின் 
கூட்டத்தைக்-கண்டு 

கொக்கரித் தண்டங் குலுங்க 
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள் 
விரவி பெற்ற பெருங்கன 
லே. வாடி வேலா!  

Monday, April 30, 2012

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -kannan mananilaiyai thangame thangam




1.கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -
                                                               அடி தங்கமே தங்கம்
கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்,
ஏதேனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். 



2.கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அந்நிய மன்னர்மக்கள் பூமியிலுண்டாம் என்னும் 
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். 

3.சொன்ன மொழிதவறு மன்னவனு க்கே எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?அவை
யாவுந் தெளிவு பெறக் கேட்டு விடடீ.

4.மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-
தலை மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே -கிழப் 
பொன்னி யுரைதததுண்டு தங்கமே தங்கம். 

5.ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை 
அழைத்துத் தனியிடத்திற் பேசிய தெல்லாம் 
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே 
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.

6.சோர மிழைத்திடையர் பெண்க ளுடனே அவன்
சூழ்ச்சித் திறமைபல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே 
வேண்டிய தில்லையென்று சொல்லிவிடடீ.

7.பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் -மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்-அதைப் 
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.

8.நேர முழுதிலுமப் பாவிதன்னையே - உள்ளம் 
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-
தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்.


Note:the lines in red are sung by the artist
Note 2:A vistor from Mountain view, California visited the dance uploaded for this song on17/7/2012.
I searched the internet again and found that the song sung by Smt.Nithyashee was available.

I have uploaded this today