Showing posts with label Bharathiar's song. Show all posts
Showing posts with label Bharathiar's song. Show all posts

Friday, March 23, 2012

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை -villinai otha puruvam valaithanai

1.வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
          வேலவா! அங்கொர்
   வெற்பு நொறிங்கிப் பொடிப்பொடி
           யானது, வேலவா!
    சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
            வள்ளியைக் -கண்டு
    சொக்கி மரமென நின்றனை தென்மலைக்
             காட்டிலே
     கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
             பாதகன் - சிங்கன்
     கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட
             வேலவா!
      பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
              வள்ளியை - ஒரு
       பார்ப்பனக் கோலந தரித்துக் கரந தொட்ட
              வேலவா!
2.வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
               கடலினை - உடல் 
   வெம்பி மருகி சுருக்கிப் புகைய
               வெருட்டினாய்.
   கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும் பெயர்ச்
                செல்வத்தை- என்றும் 
   கேடற்ற வாழ்வினை யின்ப விளக்கை 
                மருவினாய்
   கொள்ளை கொண்  டே அம ராவதி வாழ்வு 
                 குலைத்தவன் - பானு 
   கோபன் தலை பத்துக் கோடித் துணுக்குறக் 
                  கோபித்தாய்
   துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன் 
                  மானைப்போல் - தினைத்
    தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்
                  கொண்ட வேலவா!
3, ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப 
                  மாகுதே - கையில் 
     அஞ்சலெ னுங்குறி கண்டு மகிழ்ச்சியுண்
                   டாகுதே.
     நீறு படர்க்கொடும் பாவம் பிணிபசி 
                    யாவையும் - இங்கு
     நீக்கி யடியரை நித்தமுங் காத்திடும் 
                    வேலவா!
      கூறு படப்பல கோடி யவுணரின் 
                    கூட்டத்தை- கண்டு 
     கொக்கரித் தண்டங் குலுங்க நகைதிடுஞ் 
                    சேவலாய்!
      மாறு படப்பல வேறு வடிவொடு
                    தோன்றுவாள் - எங்கள் 
      வைரவி பெற்ற பெருங்கன லே, வடி 
                      வேலவா!


                    


     

     
               

Thursday, March 22, 2012

நெஞ்சி லுரமுமின்றி -nenjil uramuminri

1. நெஞ்சி லுரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வரரடி -கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
2.கூட்டத்தில் கூடிநின்று 
கூவிப் பிதற்றல்லன்றி
நாட்டத்திற் கொள்ளரடீ -கிளியே
நாளில் மறப்பாரடீ,
10.அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடி -கிளியே
ஊமைச் சனங்களடீ.
11.ஊக்கமும் உள்வலியும் 
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் -கிளியே
வாழதகுதியுண்டோ
16. சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை யிரன்காரடீ -கிளியே
செம்மை மறந்தாரடீ. 

Note: Other stanzas omitteed in the song