Saturday, January 24, 2015

Bharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...

Bharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...:    பாயுமொளி நீயெனக்கு,   பார்க்கும் விழி நானுனக்கு       தோயுமது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு.  வாயுரைக்க வருகுதில்லை, வாழி நி...

Wednesday, January 21, 2015

நெஞ்சு பொறுக்குதில்லையே-nenj porukkuthillaye-intha

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த 

1.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

அஞ்சி யஞ்சி சாவார்-இவர் 
அஞ்சாத பொருளில்லை அவனியிலே 
வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த 
மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக 
துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)


2.மந்திர வாதி யென்பார்-சொல்ல 
மாத்திரத்தி லே மனக் கிலிபிடிப்பார் 
யந்திர சூனியங்கள் -இன்னும் 
எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டோ- ஜனம் 
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம் 
அந்த அரசியலை -இவர் 
அஞ்சுதரு பேயென்றேண்ணி நெஞ்சமயர்வார்(நெஞ்சு)
  
3.சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் 
துப்பாக்கி கொண்டோருவன் -வெகு 
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் 
அப்பாலெ வனோசெல்வான்-அவன் 
ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிர்பபார் 
எப்போதும் கைத்தட்டுவார்-இவர் 
யாறிடத்தும் பூனைகள்போலேங்கிநடப்பார் (நெஞ்சு)
  
4.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 
கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு 
கோடியென் றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன் 
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால் 
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு 
நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)


5.சாத்திரங்க  லொன்றுங்  காணார் -பொயச் 
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே 
கோத்திரம் ஒன் றாயிருந்தாலும் -ஒரு 
கொள்கையிற் பிரிந்தவனைக் குழைத்திகழ்வார் 
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் -தமைச் 
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் 
ஆத்திரங்க்கொன் டேயிவன் சைவன் -இவன் 
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

நல்லதோர் வீணை செய்தே

1.நல்லதோர் வீணை செய்தே - அதை 
     நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? (நல்லதோர்)
சொல்லடி, சிவசக்தி !~ எனைச் 
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த 
     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச் 
     சுமையென வாழ்ந்திட புரிகுவையோ?(நல்லோதோர்)

2.விசையுறுப் பந்தினைப்போல் - உள்ளம்
     வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசையறு மனங்  கேட்டேன், - நித்தம்
    நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் - உயிர் கேட்டேன் -
உயிர் கேட்டேன் 
    தசையினச் தீச்சுடினும் - சிவ
சக்தியினை பாடும் நல் லகங்  கேட்டேன் 
    அசய்வறு மதி கேட்டேன்; - இவை 
அருள்வதில் உனக்கெதுந்  தடையுளதோ(நல்லதோர்)

சிவசக்தியிடம் பாரதி வேண்டுவது: 
சுடர்மிகு அறிவுடன் பிறந்துவிட்ட என்னால்  இவ்வுலகம் பயன் பெறவேண்டும். அல்லால் நான் பிறந்த இம்மண்ணுக்கு சுமையாக இருப்பதில் அர்த்தமில்லை.அதற்கு நான் வேண்டியபடி செயல்பட மனம் கேட்கிறேன்.அதை செயல்படுத்த உடல் வேண்டும், உயிர் வேண்டும்  என் தசையினை தீச்சுடுமபோதும் உன்னை பாடும் உள்ளம் வேண்டும். அதை அருள்வதில் உனக்கு ஏதும் தடை இருக்க அவசியம் இருப்பதற்கில்லை.
இல்லை எனில் நல்ல வீணையை செய்து அதை புழிதியில் எறிவது போலாகும். 
Bharathi prays to God Sivasakthi:
You created me with flaming knowledge.This world should benefit from me.Otherwise I do not want to be a burden to this land where I was born.I want you to give me mind and health and life to do what I want to do.Give me the boon to sing about you even when my body is burnt.You will have no objection to grant me this

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !

எத்தனை கோடி  இன்பம் வைத்தாய் இறைவா !

How much of happiness have you perpetuated Oh My God! Oh My God! You combined the unconscious with consciousness! There you created an amazing world by uniting the five elements You made the entire universe as a repository of multiple colors with many many many beauties to it! You created a state ‘ultimate salvation’ and there made realize completeness You segregated a state ‘’Devotion’ Oh my Supreme Almighty!